உள்நாடு

தர்கா நகர் அல்-ஹம்ரா மகாவித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா-2024

தர்கா நகர் அல்-ஹம்ரா மகாவித்தியாலயத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 1 புதிய மாணவர்களை பாடசாலைக்கு உள்வாங்கும் நிகழ்வு நேற்று (22-2-2024)  பாடசாலை மண்டபத்தில் அதிபர் பஸ்லியா பாஸி தலைமையில் நடைபெற்றது. தர்கா நகர் நஜிப் ஹாஜியார் கல்வி நிலையம் கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

களுத்துறை கல்வி வளைய ஆசிரிய ஆலோசகர் எம்.என்.முஹம்மத்,ஓய்வு பெற்ற அதிபரும் பன்னூலாசிரியருமான ஹாபிஸ் இஸ்ஸதீன். இலங்கை வங்கி முன்னாள் முகாமியாளர் கவிஞர் ரீ.எம்.ஸபா ஆகியோர் அதிதிகளாக பங்கு பெற்றினர்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *