உள்நாடு

ஒலுவில் கடலில் மூழ்கிய இரு மாணவர்களின் ஜனாஸாக்களும் மீட்கப்பட்டன..

அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் – ஒலுவில் எல்லைப் பிரதேச கடலில் நேற்று மாலை (16.02.2024) புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
கடலலையில் காணாமல் போயிருந்த 15 வயதுடைய சூர்தீன் முஹம்மட் முன்சிப் மற்றும் ரிஸ்வான் முஹம்மட் இல்ஹம் ஆகியோரது ஜனாஸா பல்வேறு தேடுதல் முயற்சிகளுக்கு பின்னர் இன்று (17.02.2024) மீட்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
( ஏ.எல்.எம்.ஷினாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *