உள்நாடு

மருதமுனை அக்பர் முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு..!

மருதமுனை அக்பர் கிராமத்தில் அமைந்துள்ள அக்பர் முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு புதிய மாணவர்கள் வரவேற்பும் பரிசளிப்பு நிகழ்வும் புதன்கிழமை (14) பிற்பகல் 4.30 மணிக்கு முன்பள்ளி பாலர் பாடசாலை மண்டபத்தில் அக்பர் பள்ளிவாசல் தலைவர்  அல்-ஹாஜ் வை.எல்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்றது.
அக்பர் ஜும்ஆ பள்ளி வாசல் தஃவா,கல்வி மற்றும் மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,பிரதம அதிதியாக கிராம நிலதாரிஅல்-ஹாஜ் என்.எம்.இஸ்மாயில்,கௌரவ அதிதிகளாக மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி எஸ்.எச்.முஜீப் (ஸலபி ),மௌலவி ஐ.எல்.எம்.கபீர் (ஸஹ்வி) மற்றும், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.நாசிக், அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எம்.யூ.எம்.சஜித் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பல வருடங்களாக கவனிப்பாரற்று இயங்கி வந்த அக்பர் முன்பள்ளி பாலர் பாடசாலையை, அக்பர் தஃவா, கல்வி மற்றும் மாணவர் ஒன்றியமானது இவ்வருடம் முதல் பொறுப்பேற்று தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

(நிஸா இஸ்மாயீல் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *