சினிமா

கவிஞர் பொத்துவில் அஸ்மினின் வரிகளில் மாமாகுட்டிமா பாடல்..

தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் இலங்கைக் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் ‘மாமாகுட்டிமா’ பாடல் புரோமோ வெளியானது.

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான னுசு. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலினை விஜய் ஆண்டனி நடித்த ‘ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகிய அண்ணாத்த மற்றும் அஜித் குமார் நடித்து வெளிவந்த விஸ்வாசம் உள்ளிட்ட படங்களுக்கும் பொத்துவில் அஸ்மின் புரோமோ பாடல்கள் எழுதியமையும் அதனை ரசிகர்கள் கொண்டாடியமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அத்தோடு முத்து முத்து கருவாயா, முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததையொட்டி எழுதிய தாகம்தீர வானே இடிந்ததம்மா பாடல் முழு தமிழகத்தையும் கண்ணீர்வடிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் இலங்கையில் வெளியாகி உலகெங்கும் டிரெண்ட் ஆன ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பாடல் இவரின் புகழை உச்சம் தொடவைத்தது.

மேலும் ராப் பிரசாத் இயக்கியுள்ள மாமாகுட்டிமா அல்பம் பாடலின் புரோமோவினை நடிகர் ஜெய் இன்று வெளியிட்டு வைத்தார். இது பற்றி பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் கூறும்போது, ‘காதலர்கள் கொண்டாடப்போகும் கானாப்பாடலின் புரோமோ இந்த காதலர் தினத்தில் வெளியாவது மகிழ்வை தருகிறது. மிகச்சிறிய வயதில் இருந்தே தேவா அவர்களின் தீவிர ரசிகன் நான். அவர் பாடிய பாடல்களை கெசட்டில் போட்டுக்கேட்டு கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அவர் எனது பாடலை பாடுகின்றார். இது நான் பெற்ற பாக்கியம்.’ என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *