விளையாட்டு

இரண்டு மாற்றங்களுடன் இலங்கை, ஆப்கான் முதலில் துடுப்பாட்டம்..

இலங்கை அணிக்கு எதிராக 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெத்தும் நிசங்க பெற்ற இரட்டை சதத்தின் மூலம் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. பின்னர் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற 2ஆவது போட்டியில் சரித் அசலங்கவின் துடுப்பாட்டமும் , வனிந்து ஹசரங்கவின் சுழலும் கைகொடுக்க இலங்கை அணி 155 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியை பெற்றுக் கொண்டதுடன் தொடரின் ஒரு போட்டி மீதமிருக்க 2:0 என தொடரை தன்வசப்படுத்தியது.

இந்நிலையில் தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று இடம்பெறும் நிலையில் நாணயச் சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பாட முடிவு செய்துள்ளது. அத்துடன் இலங்கை அணி இப் பகுதியில் வனிந்து ஹசரங்க மற்றும் மகேஷ் தீக்சன ஆகிய நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர்கள் இருவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதுடன் அவர்களுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லாலகே மற்றும் அனுபவமிக்க சுழல்பந்து வீச்சாளரான அகில தணஞ்சய ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *