உள்நாடு

காலி மாவட்ட அரபுக் கல்லூரி மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வு..

இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் அமைப்பின் ஏற்பாட்டிலான காலி மாவட்ட அரபுக் கல்லூரி மாணவர்களுக்காக தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வு அமைப்பின் தலைவர் டாக்டர் பஹ்மி இஸ்மாயில் தலைமையில் காலி தங்கெதர ஸெமோதா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் உள்ள 8 அரபுக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த செயலமர்வில் பங்குபற்றினர். டாக்டர் ரயீஸ் மீரான் செயலமர்வை நடாத்தினார். தலைமைத்துவ செயலமர்வு திட்ட தலைவர் ஸிக்பி இஸ்மாயில், திட்ட ஆலோசகர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எஸ். அஹ்மத் (மஹ்லரி) உட்பட மற்றும் பலரும் செயலமர்வில் உரை நிகழ்த்தினர். இதன் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

 

(படம்: பேருவளை பீ.ம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *