விளையாட்டு

உதைப்பந்தாட்டத் தொடரில் ஏறாவூர் இளந்தாரகை அணி சம்பியனானது

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரனையில் பரஹதெனிய நகரில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் 6:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகு வெற்றி பெற்ற ஏறாவூர் இளந்தாரகை அணி (YSSC) சம்பியன் பட்டத்தை வென்றது.

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரனையில் பரஹதெனிய பாடசாலை மைதானத்தில் கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடைபெற்ற இத் தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஏறாவூர் இளந்தாரகை அணி (YSSC) மற்றும் பம்மண்ண சார்ஜா எப்.சீ. அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இவ் இறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை அணி (YSSC) 06 : 01 என்ற கோல் அடிப்படையில் மிக இலகு வெற்றி கொண்டு சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது. இந்த சுற்றுத் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக ஏறாவூர் இளந்தாரகை (YSSC) அணியை சேர்ந்த முஸ்தாக்கும், சிறந்த தொடர் வீரராக அதே அணியை சேர்ந்த முன்சிபும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற அணிக்கு 50000 ரூபா பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 25000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன. (அ)

 

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *