விளையாட்டு

இலங்கை உயர் செயற்திரன் அணியிடம் போராடித் தோற்றது உகண்டா அணி

சுற்றுலா உகண்டா கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் உகண்டா அணி போராட்டமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணி 4 ஓட்டங்களால் திறில் வெற்றி பெற்று தொடரின் 2:0 என முன்னிலை பெற்றது.

இரண்டு வார கால பயிற்சிக்காக இலங்கை வந்துள்ள உகண்டா அணியும் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணியும் பங்கேற்ற 2ஆவது ரி20 தொடர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை போட்டியாக இடம்பெற்றது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற உகண்டா அணி முதலில் களத்தடுப்பை சேர்வு செய்திருந்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடக் களம் நுழைந்த இலங்கை இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணிக்கு கிரிஸான் சன்ஜில (42), மல்ஷ தருப்பதி (37), அணித்தலைவரான நுவனிந்து பெர்ணான்டோ (34) மற்றும் தினுர கலுப்பான (26) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 169 என்ற கௌரவதான ஓட்டத்தினைப் பெற்றுக் கொண்டது இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணி. உகண்டா அணி சார்பில் பந்துவீச்சில் கெனத் வைஸ்வ 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 170 என்ற சவாலான வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த உகண்டா அணிக்கு பந்துவீச்சில் அசத்திய கெனத் வைஸ்வ அரைச்சதம் விளாசி 50 ஓட்டங்களையும், தினேஸ் குமார் 41 ஓட்டங்களையும் , சிமோன் ஸெஸாய் 37 ஓட்டங்களையும் பெற்றிக் கொடுத்த போதிலும் உகண்டா அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 2:0 என முன்னிலை வகிக்கிறது. பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க மற்றும் விஜேசுந்தர ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். (அ)

 

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *