உள்நாடு

அணிசேரா கொள்கையின் அடிப்படையில் நாட்டை முன்னேற்றுகின்ற வேலைத்திட்டத்திற்காகவே வெளிநாட்டு விஜயங்களை ஈடுபடுத்திக் கொள்கிறோம்.                 -தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.11)

அரசியல், பொருளாதார, கலாசார பல்வேறு விடயத்துறைகள் சம்பந்தமாக நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம். தொழில்நுட்ப அறிவின் பரிமாற்றத்திற்காக நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தொடர்டபாக எனது அடிப்படைக் கவனத்தைச் செலுத்துகிறேன். இந்திய பொருளாதார அபிவிருத்தியில் தனியார் மற்றும் அரச பிரிவுகளின் பரஸ்பர புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியான வர்த்தகத்தை ஊக்குவிக்கின்ற மதியுரை நிறுவனத்தின் உத்தியோகத்தர்களை சந்தித்தோம். “யுனிக் ஐடென்டிபிகேஷன் ஒஃப் இந்தியா” நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். அரசாங்கத்திடமிருந்து கிடைக்கின்ற அனைத்துவிதமான உதவிகளும் பற்றிய ஒழுங்குறுத்துதல் மற்றும் எந்தவொரு தருணத்திலும் ஒருவர் இருதடவை குறிப்பிடப்படுமாயின் விசாரணை செய்யக்கூடியவகையில் நாட்டின் அனைத்து சனத்தொகையையும் அடையாளங் காண்பதற்கான இலக்கத்தை இந்த நிறுவனமே வழங்கியுள்ளது. புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பித்தல் சம்பந்தமாக செயலாற்றிவருகின்ற ஐகிரியேற் நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற தொழில்முயற்சியாண்மை, புத்துருவாக்கம் மற்றும் படைக்குந்திறனை தேசிய பொருளாதாரத்துடன் இணைத்துக்கொள்ளல் சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றியும் அவதானிக்க இயலுமாயிற்று. எமது வேலைத்திட்டத்திலும் இது சம்பந்தமான செயற்பாடுகள் இருப்பதால் இந்த உரையாடல் மிகவும் முக்கியமானதாகும். குஜராத் மாநிலத்தில் அமுலாக்கப்படுகின்ற கதிர்கள் மூலமாக உணவினை நீண்டகாலம் பாதுகாத்து வைக்கின்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கலந்துரையாடினோம்.

குஜராத் இன்ரநெஷனல் டிறேட் எனப்படுகின்ற நிறுவனத்திற்கும் நாங்கள் சென்றோம். நிதிசார் சேவைகளை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற வலயங்கள் தொடர்பாக செயலாற்றிவருகின்ற இந்த நிறுவனம் முன்னேற்றமடைந்த வழிமுறைகள் ஊடாக முதலீடுகளை மேம்படுத்துதல் பற்றி அவதானித்தோம். zவிக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர்’ எனும் விண்வெளிப் பயணம் பற்றி செயலாற்றுகின்ற நிறுவனத்தில் மேற்கொள்ளப்பபடுகின்ற நடவடிக்கைகள் பற்றியும் அவதானித்தோம். தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால வேலைத்திட்டத்தை தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஏற்பாடுசெய்யவும் இந்த விஜயம் பெரிதும் உறுதுணையாக அமைந்தது. இந்திய உயர்ஸ்தானிகள் அலுவலகம் மற்றும் அந்நாட்டு மத்திய அரசாங்கம் எமக்கு அளித்த இந்த வாய்ப்பு தொடர்பில் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அணிசேரா கொள்கையின் அடிப்படையில் செயலாற்றி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ்நாட்டை முன்னேற்ற இவ்வாறான வாய்ப்புகளையும் வருங்காலத்தில் பயன்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *