உள்நாடு

உக்குவளை ஆசிரியர் எம்.ஐ.எம்.நிஸ்பர் வபாத்..

உக்குவளையைச் சேர்ந்த ஆசிரியர் எம்.ஐ.எம்.நிஸ்பர் சிறிதுகாலம் சுகயீனமுற்ற நிலையில் தனது 68 வயதில் தனதில்லத்தில் கடந்த 11 ந்திகதியன்று வபாத் ஆனார்

மாத்தளை சாஹிரா கல்லூரி அதிபராக உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை உதவி அதிபராக  சுமார் 40 வருடங்களுக்குமேல் பணிபுரிந்துள்ளதுடன் உக்குவளையில் தனது தலைமையில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தை  (UREPS) ஏற்படுத்தி அதில் ஊக்கமுள்ள சிலரை அங்கத்தவர்களாகக் கொண்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் சிறப்புப் பணிகளாற்றியுள்ளார்
அத்துடன் உக்குவளை மானாம்பொட ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் உக்குவளை தக்கியா ஆகினவற்றின் நிர்வாகசபை உபதலைவராகப் பொருப்பேற்று அனைவரது ஒத்துழைப்புடன் இவற்றினதும் மற்றும் சமூக விவகார மேம்பாட்டுக்காகவும் பணியாற்றியுள்ள இவர் கண்டி உடுதெனிய கிராமத்தின்  துணைவியைக் கொண்டிருந்த  ஒரு பெண் உட்பட இரு புதல்தவர்களுக்குத் தந்தை என்பதுடன் இவரது புதல்வியும் மருமகனும்(புதல்வியின் கணவர்) ஆசிரியர்களாவர்
இவரது ஜனாஸா அன்றையதினம் இவரது உறவினர்கள் நண்பர்கள் ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் மத்தியில் மானாம்பொட ஜும்ஆ மஸ்ஜித்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *