உள்நாடு

கொழும்பு அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட முழுநாள் செயலமர்வு..

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் அஹதிய்யா இடைநிலை தேசிய சான்றிதழ் பரீட்சை எதிர் வரும் பெப்ரவரி  24ஆம் திகதி நடைபெற இருப்பதை முன்னிட்டு மேற்படி பரீட்சைக்காக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த முழுநாள் செயலமர்வு நேற்று 11ஆம் திகதி   ஞாயிற்றுக்கிழமை தெமடகொட எம்.ஐ.சி.எச்  கேட்போர் கூடத்தில் மூன்று மொழிகளிலும் தனித்தனியாக சிறந்த வளவாளர்களால் நடாத்தப்பட்டது. .

அதன் அங்குரார்ப்பண வைபவத்தில் கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவர் எம். அஷ்ரப் ரூமி , உப தலைவர் ரிஸ்வான் அன்ஸார், செயலாளர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன்,  ஊடக பொறுப்பாளர் அல் ஹாஜ் நஸார் உட்பட மற்றும் பல உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *