உள்நாடு

மாத்தளை வை.எம்.எம்.ஏ யின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இரத்ததான முகாம்..

மாத்தளை வை.எம்.எம்.ஏ யின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் முகாம் மாத்தளை கொங்காவல ரீடிங் ரூம் மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாத்தளை மாநகரசபை ஆணையாளர் சார்பாக வைத்தியர் எம்.ரிஸ்வான் மாத்தளை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி பொருப்பாளர் வைத்தியர் வேரகம, மற்றும் தாதியர்கள் அதிதிகளாக வைஎம்எம்ஏ யின் தேசிய தலைவர் சஹீட் எம் ரிஸ்வி, மல்டி தொழிலதிபர் சிராஜ் அஹமட் , அதன் மாத்தளை தலைவர் மேஜர் சஹீர் உட்பட அதன் முக்கிய உறுப்பினர்கள் பிரமுகர்கள் நலன்விரும்பிகள்  எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த வருட இறுதியில் மாத்தளை வை.எம்.எம்.ஏ யின் ஏற்பாட்டிலான இரத்ததானம் வழங்கும் முகாம் மாத்தளை பெளத்த மத்திய நிலையத்தில் நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 (ஏ.எம்.ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *