உள்நாடு

ஜனாதிபதி நாடு திரும்பினார்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார்.

தனது விஜயத்தின் போது, 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றிய அவர், பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *