உள்நாடு

மாத்தளை கலைஞர்களுடன் கலந்துரையாடல்.

உக்குவளை மாத்தளை பிரதேசங்களிலுள்ள பல்வேறு கலைத்துறைகளில் ஈடுபாடுள்ளவர்கள் அத்துடன் தமது கலைத் திறமைகளை வைத்துக்கொண்டு  இலைமறை காய்களாக இருக்கும் கலைஞர்களுடனான கலந்துரையாடலொன்றை மாத்தளையில்  நடாத்தவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள மாத்தளை மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இக்கலைஞர்களையும்  இவர்களது  கலைத் திறமைகளையும் இனம்கண்டு அவற்றினூடாக அவர்களுக்கு சமூகத்தில் களம் அமைத்துக்கொடுக்கவும் இக்  கலைஞர்களைக் கொண்டு சகல கலைத் துறைகளையும் வளர்த்து முன்னெடுத்துச் செல்வது பற்றியும்  அதற்காக அவர்களுக்கு திணைக்களம் மூலம் ஏற்ற உதவி ஒத்தாசைகளொகளைப் பெற்றுக் கொடுப்பது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்படவிருப்பதாவும்  தெரிவித்துள்ள அவர் கலைஞர்களது “விபரத் திரட்டு” ஒன்றையும் வெளியிடுவதற்கான ஏற்பாடொன்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே கலைஞர்கள் தமது கலைத்துறை விபரங்களை தமது முகவரி, தொலைபேசி இல . மற்றும் புகைப்படத்துடன்  பின்வரும் முகவரிக்கு கூடிய விரைவில் அனுப்பி வைக்குமாறு வேண்டப் பட்டுள்ளனர். (நு)
ALHAJ M .RAHMATHULLAH
DEVOLOPMENT  OFFICER
MUSLIM CULTURAL AFAIRS
(ART SECTION)
DISTRIC SECRETARY OFFICE (1)
MATALE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *