உள்நாடு

சாய்ந்தமருதில் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலயம் திறந்து வைப்பு..

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலயத் திறப்பு விழா  வைத்தியசாலை தெற்கு வீதியில் நேற்று முன்தினம் (04) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருத்துக்கான ஜனாஸா நலன்புரி காரியாலயம் தேவையாக இருந்தபோது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் ஜனாஸா நலன்புரி  அமைப்பினர் Rizley Musthafa Education Aid அமைப்பின் தலைவர் எம். றிஸ்வி முஸ்தபா விடுத்த வேண்டுகோளை ஏற்று, சாய்ந்தமருது வைத்தியசாலை தெற்கு வீதியில் அமைந்திருந்த ஒரு பழைய கட்டிடத்தை முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மர்ஹும் மயோன் முஸ்தபாவின்  நினைவாக புனர்நிர்மாணம் செய்து அதனை மக்களின் தேவைக்காக திறந்து வைக்கப்பட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலாளரினால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், Rizley Musthafa Education Aid அமைப்பின் தலைவர் எம். றிஸ்வி முஸ்தபா,  சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம், ஜம்இய்யத்துல் உலமா சாய்ந்தமருது –  மாளிகைக்காடு கிளையின் தலைவர் மௌலவி எம்.எம்.எம். சலீம் (ஷர்க்கி), சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டு கழக, சமூகசேவை அமைப்பின் தலைவர் எம்.எம். றியாஸ் மற்றும் நிருவாக உறுப்பினர்கள்,  ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *