உள்நாடு

அனுர குழுவினரின் இன்றைய சந்திப்புகள்.. மாலை அகமதாபாத் புறப்பட்டனர்..

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் விஜயத்தின் இரண்டாவது நாளாகிய இன்று (06) புதுடில்லியில் அமைந்துள்ள Observer Research Foundation உலகளாவிய சிந்தனைக் குழு மன்றத்திற்குச் சென்றார்கள். Observer Research Foundation என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதிலும் தீர்மானம் மேற்கொள்வதிலும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் வர்த்தக சமூகத்திற்கும் மதியுரை சேவைகளை வழங்குகின்ற நிறுவனமாகும்.

அதன் பின்னர் தூதுக்குழுவினர் இந்தியாவின் எலெக்ரோனிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பினை (Unique Identification Authority of India) பார்வையிட்டதோடு அதன் பிரதானிகளுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

பின்னர் இன்று (06) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் அஹமதாபாத் நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *