விளையாட்டு

துப்பாக்கி முனையில் திருடப்பட்ட ஃபேபியன் அலெனின் உடைமைகள்..!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை கிரிக்கெட் வீரரான ஃபேபியன் அலெனிடம் துப்பாக்கி முனையில் கைத்தொலைபேசி மற்றும் பை என்பன தென்னாப்பிரிக்காவில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்று வரும் எஸ்.ஏ ரி20 சீசன் 2 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர்களான ஃபேபியன் அலெனி பார்ல் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் பங்கேற்பதற்காக பார்ல் ரோயல்ஸ் அணி இன்று ஜொகனஸ்பேர்க் வந்திருந்தது.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரரான ஃபேபியன் அலெனை துப்பாக்கி முனையில் சுற்றிய கொள்ளையர்கள் அவரிடமிருந்து கையடக்க தொலைபேசிகள் மற்றும் அவரது பை ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை பார்ல்ஸ் ரோயல்ஸ் அணி நிருவாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இச் சம்பவத்தில் ஃபேபியன் அலெனிற்கு எந்த வித உடலியல் சேதங்களும் இல்லை எனவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை ஜொகனஸ்பேர்க் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *