உள்நாடு

தர்காநகர் மாதர் ஒன்றியத்தின் சுதந்திர தின மர நடுகை நிகழ்வு..

தர்ஹா நகர் மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான 76 ஆவது சுதந்திர தின மரம் நடும் வைபவம் ஸி.எம்.எச்.வரவேற்பு மண்டப முற்றவெளியில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவரும் ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளருமான நூருல் பாக்கிய கரீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலாளர் நஸ்லியா புர்கான் உட்பட உறுப்பினர்கள் பங்கு பற்றினர்.

தர்ஹா நகர் மாதர் ஒன்றியத்தின் கடந்த கால சமய,சமூக கல்விப் பணிகள் பற்றியும் எதிர்கால வேலை திட்டங்கள் தொடர்பிலும் தலைவர் நூருல் பாக்கிய கரீம் எடுத்துரைத்தார்.

தர்ஹா நகரின் வரலாற்றில் முதல் தடவையாக பிரதேச முஸ்லிம் மாதர்களை ஒன்றிணைத்து 76 வது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

தேசிய கீதத்தோடு சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமானது. ஸி.எம்.எச்.வரவேற்பு மண்டபத்தில் மற்றுமோர் அங்கமாக ஒன்று கூடல் மற்றும் ரமழான் மலிவு விற்பனையும் இடம் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தர்ஹா நகர் மாதர் ஒன்றியத்தின் பணிகளை நிகழ்வில் பங்குபற்றிய பிரமுகர்கள் பெரிதும் பாராட்டிப் பேசினர்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *