உள்நாடு

மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு (27) கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் வை.எல்.எஸ்.ஹமீட் எனும் ஆளுமை பற்றிய விஷேட நினைவுரையாற்றினர்.

மேலும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன், பிரதித் தலைவர் எம்.எஸ்.அனீஸ், பிரதித் தவிசாளர் எம்.ஐ.முத்து முஹம்மட், பிரதி செயலாளர் நாயகம் எம்.ஏ.அன்சில், பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட புத்திஜீவிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், வை.எல்.எஸ். ஹமீடின் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் ஆதவாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வை.எல்.எஸ்.ஹமீடின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

 

(அபு அலா)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *