உள்நாடு

போராட்டத்தை ஆரம்பித்தது ஐக்கிய மக்கள் சக்தி..!

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கவும், மக்கள் சுதந்திரமாக வாழவும் அரசாங்கத்தை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமானது.

“2024, ஒரு மாற்றத்தை உருவாக்கும் ஆண்டு” என்ற தலைப்பில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து மகளிர் மற்றும் இளைஞர் கிளைகளின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அத்தோடு விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி ஆர்வலர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *