உள்நாடு

மாரடைப்பால் முஜீபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் – அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் – சஜித்

கொழும்பில் இன்று (30) ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை, கொழும்பு விகார மகாதேவி பூங்காவுக்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தில் முஜீபுர் ரஹ்மான் கலந்து கொண்டு இருந்தார்.
முஜீபுர் ரஹ்மான் ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் சென்று கொண்டிருந்தபோது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது.
இதன்போது, முஜீபுர் ரஹ்மான் சட்டத்தை ஒழுங்கான முறையில் பொலிஸார் அமுல்படுத்த வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவைத் தாங்கள் மதிப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொண்டபோது, அதனாலேயே முஜீபுர் ரஹ்மான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார் என்றும், இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடினார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *