உள்நாடு

முன்னாள் இராணுவ ஜெனரல் தயா ரத்னாயக்க ஐ ம சக்தியுடன் இணைந்தார்..

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்துள்ளார்.

இன்று (ஜனவரி 29) எதிர்க்கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்திக்குக்கு தனது ஆதரவை வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொது கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக தயா ரத்நாயக்கவை நியமித்தார்.

தயா ரத்நாயக்க இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *