உள்நாடு

கரட்டைத் தொடர்ந்து தக்காளியும் விலை உயர்ந்தது..!

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகப் பெய்த கன மழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிச் செய்கை நாசமடைந்ததால், பசுமைக் குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறிப் பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு வருகின்றன.
இதன் காரணமாக, ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,350 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய மிளகாயின் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இது தவிர, இன்றைய நாட்களில் ஒரு கிலோ ப்ரோக்கோலியின் மொத்த விலை 4,100 ரூபா வரையிலும் விற்பனையாகி வருகிறது.
மேலும், வயல் நிலங்களில் பயிர்கள் அழிந்து வருவதால், பசுமைக் குடில்களில் விளையும் காய்கறி வகைகளின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *