உலகம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல மாவட்ட நிா்வாகத்தில் அனுமதி..! ராமேசுவரம் பங்குத்தந்தை சந்தியாகு பேட்டி

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப்ரவரி 23-24 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல மாவட்ட நிா்வாகத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக ராமேசுவரம் பங்குத்தந்தை சந்தியாகு  தெரிவித்தாா்.

இது குறித்து ராமேசுவரம் பங்குத்தந்தை சந்தியாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது :
இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து கலந்துகொள்ளும் திருவிழா கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா. இந்த திருவிழா பிப்ரவரி 23-24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் இருந்து பக்தா்கள் கலந்துகொள்ள வேண்டும் என யாழ்பாணத்தில் உள்ள மறைமாவட்ட ஆயா் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளாா். இது குறித்து  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு நடப்பு ஆண்டு 75 விசைப்படகுகளில் 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பயண கட்டமாக நபா் ஒன்றுக்கு ரூ 2 ஆயிரம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தா்களுக்கான விண்ணப்பபடிவம் 6 ஆம் தேதி வரை வழங்கப்படும். அதற்கு பின் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தாா்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *