உள்நாடு

அதிகாலையில் விபத்து..! ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு..!

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை (25/01/2024 ) சற்று நேரத்துக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியதில் அவர் உயிரிழந்தார் என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தில் இவரோடு பயணம் செய்த மற்றொருவரும் உயிரிழந்ததாக தெரிய வருகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென மோதி விபத்துக்குள்ளானதில் இதில் பயணம் செய்த ராஜாங்க அமைச்சரும் மேலும் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ராகம வைத்தியசாலை வட்டாரங்கள் இதனை ஊர்ஜிதம் செய்தன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *