உள்நாடு

2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் முறையாக நடைபெறும். – கல்வி அமைச்சர் அறிவிப்பு

அடுத்த (2025) ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வருடம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழக விரிவுரையாளர்களுக்கு, கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கு, தன்னால் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *