விளையாட்டு

இலங்கை எதிர் ஆப்கான் தொடர் ஆர். பிரேமதாசவில் இருந்து பல்லேகல மற்றும் ரங்கிரி தம்புள்ளைக்கு.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் தொடருக்கான மைதானங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 ஆகிய முழுமையான தொடரின் போட்டி நடக்கும் மைதானம் மற்றும் திகதி என்பன ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இலங்கை கிரிக்கெட் சபை ஊடக அறிக்கையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 தொடருக்கான கிரிக்கெட் மைதானம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது . முன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மூவகைப் போட்டிகளும் இடம்பெறுவதாக கூறப்பட்டிருக்க அப் போட்டிகளில் ரி20 தொடர் ரங்கிரி தம்புள்ள மைதானத்திற்கும் ஒருநாள் தொடர் கண்டி பல்லேகல மைதானத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் போட்டிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் ஒருநாள் தொடர் பகலிரவுப் போட்டியாகவும், ரி20 தொடர் இரவுப் போட்டியாகவும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒற்றை டெஸ்ட் போட்டி முன்னர் குறிப்பிட்ட ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *