உள்நாடு

மாநாடு ஒத்திவைப்பு..!

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பேராளர் மாநாடு 2024 ஜனவரி 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை கொழும்பு தேசிய நூலக ஆவண சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தம் காரணமாக அந்த மாநாடு பிற்போடப்பட்டது என ஐக்கிய சமதான கூட்டமைப்பின் ஸ்தாபகரும், பொருளாளருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் ஊடக அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *