உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (14) ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *