உள்நாடு

சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வரும் வாடிக்கையாளர் தொகை 75 வீதம் வீழ்ச்சி

 

பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வரும் வாடிக்கையாளர் தொகை 75 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுமார் ஐநூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், மூடப்படவுள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள், மேல் மாகாணத்தில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்பொருள் அங்காடிகளில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் குறைவினால் அவர்களது சம்பள நடவடிக்கைகள் கூட, தற்போது பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும், வர்த்தக சங்கங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

 

(ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *