விளையாட்டு

U19 உலகக்கிண்ண தொடருக்கான தென்னாபிரிக்கா பயணமானது இலங்கை அணி.

தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்க சினித் ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அணி இன்று தென்னாபிரிக்கா பயணமானது.

15ஆவது 19 வயதுக்குற்பட்ட ஆண்களுக்கான ஒருநாள் உலகக்கிண்ண தொடர் இலங்கையில் இடம்பெற இருந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக ஐசிசி இத் தொடரை இலங்கையிலிருந்து மாற்றி தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையிடம் வழங்கியிருந்தது.

இதற்கமைய இப் 15ஆவது 19 வயதுக்குற்பட்ட ஒருநாள் உலகக்கிண்ண தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. 16 அணிகள் பங்கேற்கின்றன இத் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதல் சுற்று லீக் ஆட்டங்களாக இடம் பெறவுள்ளது. அதனால் ஒரு குழுவில் 4 அணிகள் வீதம் 4 குழுக்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கை அணி குழு சி இல் அவுஸ்திரேலியா, சிம்பாப்பே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுடன் இடம்பிடித்துள்ளது. இத் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் சிம்பாப்பே அணியை எதிர்வரும் 21ஆம் திகதி டைமண்ட் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இத் தொடரில் பங்கேற்கவுள்ள சினித் ஜெயவர்த்தன தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இலங்கை 19 வயதுக்குற்பட்ட அணி இன்று மத வழிபாடுகளின் பின்னர் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இருந்து தென்னாப்பிரிக்கா நோக்கி புறப்பட்டது. இவ் இலங்கை அணியில் தமிழ் பேசும் வீரரான ஷாருகன் சன்முகநாதன் இடம்பிடித்துள்ளமை விஷேட அம்சமாகும்.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *