உள்நாடு

தமிழரசு கட்சி தலைவர் தேர்வு.. 21ல் இரகசிய வாக்கெடுப்பு..

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம் .ஏ.சுமந்தரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் இன்று(11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல சிறிதரன் விடுதியில் கூடி பேசினர்.

எவருமே வேட்பாளர் தெரிவில் இருந்து ஒருவருக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவரவர் பக்க நியாயங்களை கதைத்தனர்.எனவே எதிர்வரும் 21/01/2024,ல் திருகோணமலையில் பொதுக்குழு கூட்டத்தில் ஜனநாயமுறையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சியில், தலைவர் தெரிவில் விட்டுக் கொடுப்பொன்று இல்லாததால், பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *