உள்நாடு

ஜனாதிபதி, பொதுத் தேர்தல் குறித்து அறிவிப்பு..

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடக்குமென ஜனாதிபதி செயலகத்தில் நடந்த தனது கட்சி பிரமுகர்களுடனான முக்கிய கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

அதேபோல் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரியில் நடக்குமென்ற அவர் இந்த சந்திப்பில் கூறியுள்ளார். அதன் பின்னர் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுமெனவும்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக தாம் களமிறங்க உத்தேசித்துள்ளதாகவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது மக்கள் சந்திப்பை இம்மாத நடுப்பகுதியில் காலியில் நடத்தவும் இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *