உள்நாடு

பாகிஸ்தானையும் இம்ரானையும் ஒரு நாளும் மறக்க முடியாது. -அமைச்சர் ஹக்கீம்

இலங்கை-பாக்கிஸ்தான் கிரிக்கற் விளையாட்டை விட இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பாக்கிஸ்தான் நாட்டையும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும் நாம் ஒருபோதும் வாழ்க்கையில் மறக்க முடியாது…… ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உரை
முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசும் சில அதிகாரிகளும் கொவிட் 19 காலத்தில் முஸ்லிம்களது ஜனாசாக்களை எரித்தார்கள்… அதனை இலங்கை வந்திரங்கிய பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் ஆரவாரமில்லாமல் அமைதியாக முன்னாள் ஜனாதிபதியிடம் பேசி முஸ்லிம் ஜனசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார்கள். இதற்கு பிரதிஉபகாரமாக ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமையத்தில் இலங்கைக்கு எதிராக மனித் உரிமை மீறல் வாக்கெடுப்பாக பாக்கிஸ்தான் இலங்கைக்கு வாக்களிப்பதற்காக சில நாடுகளின் ஆதரவுகளைப் பெற்றுக் கொடுத்தார். …
இனரீதியாகாவும், உலக சுகாதார கொவிட் சுற்றரிக்கை மீறியும் இலங்கையில் கொவிட் மரணிப்பால் முஸ்லிம்களது ஜனாசாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுவந்தன. இதனை தடுத்து எமக்கு அடக்கம் செய்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தவர் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களே என ரவுப் ஹக்கீம் பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகரின் பிரியாவிடை வைபவத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் புல்கி அவர்கள் இலங்கையின் உயர்ஸ்தாணிகர் பதவிக் காலத்தினை முடித்து நாடு திரும்புகின்றார்… இலங்கை சுற்றுலாத்துறை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர் ஏற்பாடு செய்த பிரியாவிடை வைபவம் இராப்போசன வைபவமும் 09.01.2024 கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இவ் வைபத்திற்கு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், சுற்றலாத்துறை மற்றும் கானியமைச்சின் செயலாளர் சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனத்தின் தலைவர் பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகர் ஆலயத்தின் அதிகாரிகள், முஸ்லிம் கெல்ப் நிறுவனத்தின் மிஹ்லார் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *