உள்நாடு

கல்முனை கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளுக்கு விடுமுறை!!

கல்முனை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகள் நாளை (11) ஆரம்பமாக இருந்த நிலையில் நாட்டிலும், எமது பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) ஆகிய தினங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு மீண்டும் எதிர்வரும் 16.01.2024 அன்று (செவ்வாய்க்கிழமை) வழமைபோன்று பாடசாலைகள் இடம்பெறும் என கல்முனை வலயக்கல்வி பணியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறையானது இரு தினங்களுக்குமான பதில் பாடசாலை 20 ஆம் திகதி சனிக்கிழமையும், 27 ஆம் திகதி சனிக்கிழமையும் நடைபெறவேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதிக்கிணங்க கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக கல்முனை வலயக்கல்வி பணிமனை விடுத்துள்ள அறிவிப்பாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *