விளையாட்டு

பங்களாதேஷ் பீரிமியர் லீக்கில் களமிறங்கும் குசல் மெண்டிஸ்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் சட்டொக்ராம் செலஞ்சர்ஸ் அணியில் ஆட இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அந்த அணி தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இலங்கை அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் குசல் மெண்டிஸ், தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக செயல்பட்டு வருகின்றார்.

இதனிடையே, குசல் மெண்டிஸ் சர்வதேசத்தில் நடைபெற்று வரும் ஒருசில T20 லீக் தொடர்களில் விளையாடி வருவதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சிறந்த பெறுபேற்றுகளையும் பதிவுசெய்துள்ளார். இந்த நிலையில் BPL தொடரில் செட்டகிரம் செலன்ஜர்ஸ் அணிக்காக அடுத்த ஆண்டு குசல் மெண்டிஸ் விளையாடவுள்ளார்.

ஏழு அணிகள் பங்கேற்கும் BPL தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த 11 வீரர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *