உள்நாடு

2024 பொதுத்தேர்தலில் 196 உறுப்பினர்களுக்காக 8,388 வேட்பாளர்கள் போட்டி 690 வேட்புமனுக்கள் ஊடாக

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாக 8,388 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன.

பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் 764 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அவற்றில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 690 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 ஆசனங்களுக்காக 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலமும் 29 பேர் தேசிய பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த முறை பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவாக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 902 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த முறை பொதுத் தேர்தலில் அதிக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைக் கொண்ட திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்கு 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேபோன்று புத்தளம் மாவட்டத்தில் 08 உறுப்பினர்களுக்காக 429 வேட்பாளர்கள் 24 அரசியல் கட்சிகள் 15 சுயேட்சை குழுக்கள் ஊடாகவும் வன்னி மாவட்டத்தில் 06 உறுப்பினர்களுக்காக 423 வேட்பாளர்கள் 22 அரசியல் கட்சிகள் 25 சுயேட்சை குழுக்கள் ஊடாக போட்டியிடுகின்றனர்.

மொனராகலை மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்கு 135 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்கு 120 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மொனராகலை மற்றும் பொலனறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலேயே குறைந்தளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *