சாதனை மாணவனை கெளரவித்த நாவலடி முஅஸ்ஸா பள்ளிவாயல் நிருவாகம்
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த சாதரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற தியாவட்டவான் அறபா வித்தியாலய மாணவன் நிஜாம்தீன் அஸாத்தை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நாவலடி, முஅஸ்ஸா பள்ளிவாயலில் இடம் பெற்றது.
முஅஸ்ஸா பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எஸ்.எச்.எம்.அறபாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் திருமதி றமீஸா, சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.முஹம்மட், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
புதிதாக நாவலடியில் குடியேற்றப்பட்ட 27 வீட்டுத்திட்டத்தில் குறித்த மாணவர் மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் படித்து சித்தியடைந்திருப்பது முன்மாதிரியான விடயமாகும் என அதிதிகள் மாணவனை பாராட்டினர்.
மு அஸ்ஸா பள்ளிவாயலின் செயலாளர் ஏ. ஹலீமின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)