பொதுத்தேர்தலில் இருந்து விலகிய விமலின் கட்சி
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்டு, பெரும்பான்மையை எட்டாத பட்சத்தில் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்காமல் ஆட்சியமைக்க அவரை அனுமதிப்பதே இந்த முடிவு என அக் கட்சி அறிவித்துள்ளது.