உள்நாடு

34 வது வருட சுஹதாக்கள் நினைவு தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு

ஏறாவூரில் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலி பயங்கரவாதிகளால் வெட்டியும், சுட்டும்,கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்களின் 34 வது வருட நினைவு தினம்  நேற்று (12) ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஏறாவூர் சுஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் தலைவர் எம்.எல்.ஏ.லத்தீப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மரணித்த உறவுகளுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு விஷேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றதோடு சுஹதாக்கள் பற்றிய நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஷாஹிர் மௌலானா மற்றும் உலமாக்கள்,கல்விமான்கள்,மத்ரசா மாணவர்கள் சுஹதாக்களின் உறவினர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் மிலேச்சத்தனமான இனப் படுகொலையின் போது அப்பாவி பொதுமக்கள் 121 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

 

(உமர் அறபாத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *