Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

100 சுற்றுலா நிறுவனங்களுக்கு தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கைக்கான ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய மட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து நாடாளரீதியில் சுற்றுலாத்துறையில் பங்களிப்புச் செய்கின்ற சிறிய மற்றும் நடுத்தர 100 சுற்றுலா நிறுவனங்களை பாராட்டியும் தகமைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 29.05.2024 பண்டார நாய்கக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சுற்றுலாத்துறை காணி , இளைஞர் அபிவிருத்தி அமைச்சர் ஹரின் பெர்னான்டோ பிரதம அதிதியாகக்க கலந்து கொண்டார் அத்துடன் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குப்டாவும் அமைச்சின் செயலாளர் எச்.எம்.பி ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஆர் சரிப்டீனும் கலந்து கொண்டார்

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *